17/11/2025
இணுவில் பொது நூலக தகவல் தொழில்நுட்ப மையத்தில் தேசிய கல்வியியற் கல்லூரிக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான நிகழ்நிலை வசதி
2024 (2025) ஆம் ஆண்டிற்கான தேசிய கல்வியியற் கல்லூரிக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு (MOE) தெரிவித்துள்ளது.
மாணவர்கள் விண்ணப்பங்களை இணுவில் பொது நூலக தகவல் தொழில்நுட்ப மையத்தில்
நவம்பர் 18திகதியிலிருந்து தினமும் காலை 9.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை விண்ணப்பிக்க முடியும் மேலதிக தகவல்களுக்கு
0770737919
0212241930
குறிப்பு
மாணவர்கள் கவனத்திற்கு ….
👉🏿 உ/த பரீட்சை சுட்டென் (Index no A/L Exam)
👉🏿 ச/த பரீட்சை சுட்டென் (Index no O/L Exam) (சாதாரண தர பரீட்சைக்கு எத்தனை தடவைகள் தோற்றியிருப்பினும் அத்தனை தடவைகளுக்குமுரிய சுட்டிலக்கம்)
👉🏿 தாய்/தந்தை/பாதுகாவலர் தேசிய அடையாள அட்டை இலக்கம் (N.I.C NO)
👉🏿 பாடநெறி (Course) தெரிவு
👉🏿 மாவட்டம் (மாவட்டத்தில் இருக்கும் காலம்)
ஆகியவற்றை தவறாது கொண்டு வரவும்
அந்தவகையில் நாடளாவிய ரீதியில் உள்ள 19 தேசிய கல்வியற் கல்லூரிகளுக்கும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளிலும் கற்கை நெறியைத் தொடர்வதற்கு மாணவர்கள் விணண்ப்பிக்க முடியும்.
அதன்படி, இந்த மாதம் 28 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் விண்ணப்பங்களை நிகழ்நிலை ஊடாக சமர்ப்பிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே மாணவர்கள் தங்களுக்கு பொருத்தமான கல்வியியற் கல்லூரிகளை தெரிவுசெய்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.