03/05/2023
*கல்லூரியில் சேர்க்கைக்கு தயாராயிருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் கவனத்திற்கு*
இந்த 2023-24 கல்வியாண்டில்
*கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் சட்டக் கல்லூரிகளில்* தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று உள்ளவர்கள் கீழ்கண்ட விசயங்களை முதலில் சரிசெய்து வைத்து கொள்வது *கடைசி நேர அலைச்சலையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும்.*
🔵 *2023ஆண்டுக்கான +2 தேர்வு முடிவுகள் மே மாதம் 08 ஆம் தேதி* வரவுள்ளது என்பதனை அறிவோம்.
🔵 மாணவர்களின் *பாஸ்போர்ட் சைஸ் கலர் போட்டோ 10 ம், ஸ்டாம்ப் சைஸ் போட்டோ 4 ம்* எடுத்து வைத்துக் கொள்ளவும். மேலும் அவற்றை *டிஜிட்டல் வடிவிலும்* வாங்கி வைத்துக்கொள்ளவும்.
🔵 *மாணவர்கள் பெயரில் ஏதேனும் ஓர் தேசிய மயமாக்கபட்ட வங்கியில்* [Nationalized bank] *சேமிப்பு* கணக்கு ஒன்று துவக்கி வைத்துகொள்ளவும், வங்கி கணக்கு துவங்க *பான் கார்டு* PAN CARD இல்லாதவர்கள் விடுமுறையில் *விண்ணப்பித்து எடுத்துக் கொள்ளவும்.*
🔵 *பிறப்பு சான்றிதழ்* (Birth certificate) ஒரிஜினல் இல்லாதவர்கள் பஞ்சாயத் போர்டு /நகராட்சி/ மாநகராட்சி ஏதேனும் ஒன்றில் விண்ணப்பித்து புதிய பிறப்பு சான்றிதழ் வாங்கி வைத்து கொள்வது நல்லது.
🔵 *சாதி சான்றிதழ்* (Community certificate) இல்லாதவர்களும் / ஒரிஜினல் தங்கள் கைவசம் இல்லாதவர்ககளும் இது சமயம் புதியது ஒன்று வாங்கி வைத்து கொள்ளவும். இச்சான்று *தற்போது QR code-உடன் கூடிய digital வடிவில்* கொடுக்கப்படுகிறது.
இந்த சான்றிதழ் கல்லூரியில் அரசு இடஒதுக்கீட்டில் இடம் கிடைக்க தேவை. மேலும் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இது தேவை.
🔵 *பிறப்பிட சான்றிதழ்* (Nativity certificate) இல்லாதவர்கள் புதியது ஒன்று வாங்கி வைத்து கொள்ளவும். இச்சான்று தற்போது QR codeஉடன் கூடிய digital வடிவில் கொடுக்கப்படுகிறது.
*இந்த சான்றிதழ் நீங்கள் தமிழ்நாட்டை* சேர்ந்தவர்தான் என்பதை உறுதிபடுத்தி, *பொறியியல்/ மருத்துவ* கல்லூரியில் *அரசு இடஒதுக்கீட்டில்* இடம் கிடைக்க தேவை.
🔵 *முதல் தலைமுறை பட்டதாரி* (First generation graduate certificate) சான்றிதழை, தகுதியானவர்கள் வாங்கி வைத்துக்கொள்ளவும். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்லூரி கட்டணத்தில் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.
🔵 *வருமான சான்றிதழ்,* தேவையுள்ளவர்கள் வாங்கி வைத்துக்கொளவும். இது பள்ளி, கல்லூரிகளில் கல்வி உதவித்தொகைக்கு மற்றும் வருவாய்வழி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க தேவை.
*முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், பிறப்பிட சான்றிதழ் தேவையுள்ள மாணவர்கள்* இப்பொழுதே *இ- சேவை மையங்கள்* மூலம் விண்ணப்பித்து வாங்கி வைத்து கொள்ளவும். 1-2 வாரங்களுக்குள் கிடைத்துவிடும்.
🔵 *நீட் தேர்வு மற்றும் மருத்துவ சேர்க்கைக்கு* (MBBS/ BDS) விண்ணப்பிக்க விரும்புவர்கள், *போட்டோ மற்றும் கைரேகைகளை டிஜிட்டல் வடிவில் ஸ்கேன் செய்து வைத்திருக்கவேண்டும்.* மேலும் *பெற்றோர்களின் சாதி சான்றிதழும் தேவை.*
*பெற்றோர்கள் கவனத்திற்கு*
1. *மாணவர்களின் பெயர்கள்* இதுவரை *ரேஷன்* கார்டு எனும் குடும்ப அட்டையில் சேர்க்காதவர்கள் இப்பொழுதே சேர்த்து கொள்வது நல்லது.
2. *மாணவர்களின் TC, Mark sheet மற்றும் எல்லா சான்றிதழ்களையும் ஜெராக்ஸ் எடுத்து வீட்டிலும் அல்லது எல்லா சான்றிதழ்களையும் கணிப்பொறியில் PDF வடிவில் சேமித்து வைத்துகொள்ளவும்.* குறைந்தது எல்லாவற்றிலும் 10 காப்பி தேவை.
3. *பிள்ளைகளுக்கு +2 பரிட்சை முடிவுகள் வரும் முன்பாக* தாங்கள் பிள்ளைகளை *எந்த கல்லூரியில்எந்த பாடப்பிரிவில் சேர்ப்பது* என மாணவர்களும் பெற்றோர்களும் பேசி தீர்மானம் செய்து வைத்து கொள்வது நல்லது.
*மாணவர்களின் பெயர்கள், பிறந்த தேதி, முகவரி, பெற்றோர்களின் பெயர்கள் எல்லா சான்றிதழ்களிலும், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களிலும், எழுத்துப்பிழை இன்றி சரியாக, ஒரே மாதிரியாக உள்ளதா என்று சரிபார்க்க வேண்டும்.*
*கல்லூரி சேரக்கை* *தகவல்களை* நாளிதழ், டிவி மற்றும் தொடர்புடைய இணையதளம் மூலம் அறிந்து வரவும்.
தற்பொழுது *பெரும்பாலான கலை/அறிவியல்/பொறியியல் /சட்டக் கல்லூரி படிப்புகளுக்கு சேருவதற்க்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.*
பெரும்பாலான *தனியார் கலை-அறிவியல் கல்லூரிகள் சேர்க்கை விண்ணப்ப விநியோகம தொடங்கியுள்ளது நன்றி