25/05/2026
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா காரையூர் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது.
காரையூர் முத்துமாரியம்மன் கோயில் வைகாசித் திருவிழா கடந்த 17-ம்தேதி காப்புக் கட்டுதலுடன்,பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது.விழாவில் காரையூர் மற்றும் சுற்றுவட்டார கிராம பக்தர்கள் பூத்தட்டு' எடுத்துவந்து அம்மனுக்கு சாத்தி வழிபட்டனர். தொடர்ந்து தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.நேற்று முன்தினம் 24 -ம் தேதி பொங்கல் விழா நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.விழாவில் முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுக்குப்பின் அம்மன் தேரில் எழுந்தருளிய பிறகு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க புறப்பட்ட தேர், முக்கிய வீதிகளில் வலம் வந்து தேரடியில் நிலையை அடைந்தது. விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர்.விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை காரையூர் காவல்துறையினர் செய்திருந்தனர்.